Posts

Showing posts from February, 2026

போர்டிங் ஸ்டேஷனில் ஏறாவிட்டால் இனி டிக்கெட் ரத்தாகும்ரயில்வே புதிய விதிமுறை அமலுக்கு வந்தது

Image
பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறத் தவறினால், அவரது இருக்கை உடனடியாக காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகவும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முன்பதிவு செய்த பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தொடக்க நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்த டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். பழைய விதிமுறை vs புதிய விதிமுறை:  * முன்பு: ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிலையங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியிருந்தது.  * தற்போது: அனைத்து ரயில்களிலும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் (HHT) எனப்படும் கையடக்க கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பயணி வரவில்லை என்பதை டிடிஇ (TTE) உடனடியாக திட்டத்தில் பதிவேற்றுவார். இதனால் அந்த...